Tuesday, January 11, 2005
சிக்கல் குழந்தைகள் முகாம் இப்போதைய நிலை
தமிழக அரசு நாகப்பட்டினம் அருகே உள்ள சிக்கல் என்ற ஊரில் ( புகழ் பெற்ற முருகன் தலம்; தில்லானா மோக்னாம்பாள் படத்தில் சிவாஜி கணேசன் ஏற்ற பாத்திரத்தின் பெயர் சிக்கல் சண்முகசுந்தரம்) தமிழக அரசு சுனாமியில் தாய் தந்தையரை இழந்த குழந்தைகளுக்காக ஒரு முகாம் நடத்தி வருகிறது. அது குறித்து இன்று தினமணியில் வந்துள்ள செய்தியை கீழே தந்துள்ளேன். சுனாமிக் குழந்தைகளுக்கு உதவிகளைத் திட்டமிடும் போது இந்தத் தகவல்களைக் கருத்தில் கொள்ளலாம்.
மாலன்
தினமணி செய்தி:
சுனாமியில் பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு ஆழ்நிலை தியானப் பயிற்சி
நாகப்பட்டினம், ஜன. 12: சுனாமி பேரலையால் பெற்றோர்களை இழந்து அனாதையான குழந்தைகளுக்கு ஆழ்நிலை தியானப் பயிற்சி அளிக்கப்படுகிறது.
நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கலில் அரசு சார்பில் அண்மையில் திறக்கப்பட்டுள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் 2 முதல் 18 வயது வரையிலான பெற்றோர்களை இழந்த குழந்தைகள் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இதில் 37 பேர் தாய், தந்தை இருவரையும் இழந்தவர்கள். 10 பேர் பெற்றோரில் ஒருவரை இழந்தவர்கள்.
இவர்கள் அனைவரும் நாகப்பட்டினத்தைச் சுற்றியுள்ள அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம், நம்பியார்நகர் கிராமங்களைச் சேர்ந்தவர்கள். இவர்களுக்கு சுனாமி அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்கான நடவடிக்கையின் ஒரு பகுதியாக தற்போது ஆழ்நிலை தியானப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கான நற்பணியில் ஆன்மிக அமைப்புகளும், சமூகசேவை அமைப்புகளும் ஈடுபட்டுள்ளன.
தியானப் பயிற்சிக்குப் பிறகு பல குழந்தைகள் அதிர்ச்சியிலிருந்து தெளிவுபெற்றுள்ளனர். சில குழந்தைகள் தங்கள் பெற்றோர் இன்னும் உயிருடன் இருப்பதாக எண்ணியுள்ளனர்.
இந்த இல்லத்துக்கு இந்தியா மற்றும் வெளிநாடுகளிலிருந்து உதவிகள் வந்துள்ளன. இங்குள்ள குழந்தைகளைத் தத்தெடுக்க பலர் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
சிறு வயது குழந்தைகளுக்கு பாடம் கற்றுத்தர ஒரு ஆசிரியை நியமிக்கப்பட்டுள்ளார். பெரிய குழந்தைகள் அருகிலுள்ள பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
மாலன்
தினமணி செய்தி:
சுனாமியில் பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு ஆழ்நிலை தியானப் பயிற்சி
நாகப்பட்டினம், ஜன. 12: சுனாமி பேரலையால் பெற்றோர்களை இழந்து அனாதையான குழந்தைகளுக்கு ஆழ்நிலை தியானப் பயிற்சி அளிக்கப்படுகிறது.
நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கலில் அரசு சார்பில் அண்மையில் திறக்கப்பட்டுள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் 2 முதல் 18 வயது வரையிலான பெற்றோர்களை இழந்த குழந்தைகள் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இதில் 37 பேர் தாய், தந்தை இருவரையும் இழந்தவர்கள். 10 பேர் பெற்றோரில் ஒருவரை இழந்தவர்கள்.
இவர்கள் அனைவரும் நாகப்பட்டினத்தைச் சுற்றியுள்ள அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம், நம்பியார்நகர் கிராமங்களைச் சேர்ந்தவர்கள். இவர்களுக்கு சுனாமி அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்கான நடவடிக்கையின் ஒரு பகுதியாக தற்போது ஆழ்நிலை தியானப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கான நற்பணியில் ஆன்மிக அமைப்புகளும், சமூகசேவை அமைப்புகளும் ஈடுபட்டுள்ளன.
தியானப் பயிற்சிக்குப் பிறகு பல குழந்தைகள் அதிர்ச்சியிலிருந்து தெளிவுபெற்றுள்ளனர். சில குழந்தைகள் தங்கள் பெற்றோர் இன்னும் உயிருடன் இருப்பதாக எண்ணியுள்ளனர்.
இந்த இல்லத்துக்கு இந்தியா மற்றும் வெளிநாடுகளிலிருந்து உதவிகள் வந்துள்ளன. இங்குள்ள குழந்தைகளைத் தத்தெடுக்க பலர் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
சிறு வயது குழந்தைகளுக்கு பாடம் கற்றுத்தர ஒரு ஆசிரியை நியமிக்கப்பட்டுள்ளார். பெரிய குழந்தைகள் அருகிலுள்ள பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
Comments:
<< Home
அன்புள்ள மாலன்,
குழந்த்தையை தத்து எடுக்க என்ன செய்ய வேண்டும். த்ங்களிடம் முகவரி உள்ளதா. இருப்பின், இந்த பதிவில் பதிய விரும்புகிறேன்.
Post a Comment
குழந்த்தையை தத்து எடுக்க என்ன செய்ய வேண்டும். த்ங்களிடம் முகவரி உள்ளதா. இருப்பின், இந்த பதிவில் பதிய விரும்புகிறேன்.
<< Home