tag:blogger.com,1999:blog-100811432008-07-05T09:31:49.394-07:00ட்சுனாமி மீட்புபணி ஒருங்கிணைப்பு.Narainhttp://www.blogger.com/profile/14540588654670738804noreply@blogger.comBlogger42125tag:blogger.com,1999:blog-10081143.post-1145860777735399522006-04-23T23:39:00.000-07:002006-04-23T23:39:37.746-07:00testtestROSAVASANTHhttp://www.blogger.com/profile/15364954312745030579noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10081143.post-1128728113525106802005-10-07T16:34:00.000-07:002005-10-07T16:35:13.533-07:00TRO releases tsunami reportTRO releases tsunami report<br /><br />[TamilNet, October 07, 2005 17:08 GMT] <br />Tamil Rehabilitation Organization (TRO), a Sri Lanka Government registered NGO working exclusively in the NorthEast, released its six-month report this week on TRO's tsunami activities. TRO was praised by many international relief organizations and media for its effectiveness in attending to the people affected by the disaster.<br /><br />http://www.tamilnet.com/art.html?catid=13&artid=16040-/பெயரிலி.noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10081143.post-1125497335018025062005-08-31T06:59:00.000-07:002005-08-31T07:08:55.030-07:00செய்தி: டேவ் மேத்யு வின் சுனாமி பணி.(2005-08-29) Dave Matthews Band Joins With CARE To Fight 'Tsunami Of Poverty' In Sri Lanka.<br />NEW YORK (Dave Matthews Fans Website) - Out of deep concern for the long-term needs of impoverished communities affected by the tsunami and conflict in Sri Lanka, Dave Matthews Band, through its Bama Works fund, has committed an initial $250,000 to CARE, one of the world's leading humanitarian organizations. These funds will support CARE's poverty-fighting programs in two villages, Echchalampattu (Tamil population) and Seruvila (Sinhala and Muslim populations), located in the northeast district of Trincomalee, one of the hardest hit stretches of coast in Sri Lanka. With additional support from fans, more villages can be reached. <br />"Together with CARE, we encourage our fans to join us in this long-term effort to make a serious and lasting impact in the lives of people in Sri Lanka," said Dave Matthews Band. "It's critical that we continue to help people overcome their everyday tsunami of poverty and elevate their standard of living beyond where they were when the tsunami struck." <br /><br />Dave Matthews Band and CARE are calling on fans to support this long-term effort by encouraging them to make donations directly through the band's website www.davematthewsband.com. Donations made by fans will be matched 100 percent by Dave Matthews Band. Fans are encouraged to return to the Web site over time to receive updates about the people they are helping in Sri Lanka as well as to check for special promotions they could enter to win by making a donation. <br /><br />Fans and friends of the band are already answering the call, sending in donations at a steady rate and even holding benefit concerts in Charlottesville and New York City. Earlier this year, the rock band moe. raised more than $75,000 in a single night, funds that were matched by Dave Matthews Band. <br /><br />Funding from Dave Matthews Band and their fans will be focused in a part of Sri Lanka that was hard hit by the tsunami and where communities continue to suffer from the effects of conflict and poverty. In Trincomalee, the tsunami claimed more than 1,000 lives and drove over 30,000 families from their homes. The disaster occurred in the wake of a two-decade civil war that claimed approximately 65,000 lives, and fragile three-year-old cease-fire between the government and rebels in the area. People there now live in a state of extreme poverty with little or no access to income generating opportunities and basic necessities like nutritious food that they produce themselves and clean drinking water. <br /><br />In the villages of Echchalampattu (Tamil population) and Seruvila (Sinhala and Muslim populations) in Trincomalee, CARE will initiate the following work starting in January 2006: <br /><br />* Provide small loans and train people, specifically women, to start up and manage small businesses; <br /><br />* Distribute nets and other equipment to fishermen so they can resume their trade; <br /><br />* Assist farmers by providing them with the seeds, tools and technical support they need to restart agricultural production and feed their families for the long term; <br /><br />* Provide families with animals to raise and reproduce to sell in local markets; <br /><br />* Build 500 public sanitation facilities and the 35 wells and other sources of clean water to help ensure the health and well-being of thousands of families; <br /><br />* Identify opportunities to bring together village leaders to support dialogue for promoting peaceful collaboration among people of different ethnicities. <br /><br />"CARE is heartened by the support of Dave Matthews Band and their fans. Together, we can contribute to the reduction of poverty and vulnerability in Sri Lanka," says Peter Bell, president and CEO of CARE. "Rebuilding communities and livelihoods from scratch cannot occur in a matter of months. It will take years of hard work and commitment. In doing so, it's imperative to incorporate the wishes and protect the rights of people of all ethnicities whose lives have been turned upside down." <br /><br />CARE has worked in Sri Lanka since 1956, responded quickly to the tsunami, and understands the cultural and political challenges faced by many communities. In carrying out development programs in Trincomalee and in other parts of Sri Lanka, CARE will continue to give special attention to the needs of displaced people of all ethnic origins that have suffered from the effects of the tsunami, conflict and poverty. <br /><br />Dave Matthews Band – Carter Beauford, Stefan Lessard, Dave Matthews, Leroi Moore and Boyd Tinsley – and their Bama Works Fund, established in 1999, have supported a variety of organizations and campaigns and donated millions of dollars in grants to a variety of organizations in their hometown of Charlottesville, Virginia, and around the world. Beneficiaries have included public education, community parks, youth community clubs, the Amazon Rain Forest and AIDS organizations.KARTHIKRAMASnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10081143.post-1124897011660228812005-08-24T08:18:00.000-07:002005-08-24T08:25:17.353-07:00சீனா-இலங்கை நட்புகிராமம், சுனாமி நிவாரணம்.WALAHANDUWA, Sri Lanka, Aug. 22 (Xinhuanet) -- A foundation ceremony for the China-Sri Lanka Friendship Village was held Monday in Walahanduwa of Galle district, about 144 km south of Colombo, to house the displaced and the homeless due to last y<!--ADV_CONTENT-->ear's tsunami. <p>Addressing the ceremony, Jiang Yiman, executive vice president of Red Cross Society of China, said "all the Chinese people across the country have shown great care and much concern about the people in the tsunami-hit areas in Sri Lanka after the suddenly occurred tsunami which brought tremendous disasters to the people of Sri Lanka, causing great losses for people's lives and belongings". <p>She said people from all walks of life one after another have all voluntarily rendered donations in cash and kind with a view torelieving and reducing the suffering caused by the disasters. The fund collected by the China Charity Federation and China Red Cross Society to built the village is also from Chinese civilian people. <p>"Helping to build China-Sri Lanka Friendship Village is strengthening the century old relationship between China and Sri Lanka," Dinesh Gunawardane, minister of Sri Lanka Urban Development and Water Supply said. <p>"This village is a symbol of love and kindness of Chinese people to Sri Lankan people," he said. <p>The village is to be built under a memorandum of understanding signed on May 10 by the China Charity Federation and the Sri Lankan government. <p>Under the memo, the project will be completed within nine months and will cost 10 million US dollars. The houses in the village will have minimum floor area of 500 square feet (about 46.5 square meters) with two bed rooms, a living room, kitchen and toilet. <p>The Sri Lankan government will provide land for the construction of houses in the village, with one house costing about 4,000 US dollars. <p>The China Charity Federation has provided 10 million yuan (about 1.21 million US dollars) of emergency aid to Sri Lanka after the tsunami hit the country in December 2004. <p>More than 30,000 people were killed and up to one million were displaced in the disaster. EnditemKARTHIKRAMASnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10081143.post-1123096135798731302005-08-03T12:06:00.000-07:002005-08-03T12:08:55.806-07:00சுனாமி: ரூ. 700 கோடியில் கடல் சுவர்! தமிழக அரசு திட்டம்சுனாமி: ரூ. 700 கோடியில் கடல் சுவர்! தமிழக அரசு திட்டம்<br /><br />ஆகஸ்ட் 01, 2005<br /><br />சென்னை:<br /><br />தமிழக கடலோர மாவட்டங்களில் ரூ. 700 கோடியில், 600 கிலோமீட்டர் தொலைவிற்கு சுனாமி தடுப்புச் சுவர் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. <br /><br />கடந்த ஆண்டு டிசம்பர் 26ம் தேதி ஏற்பட்ட சுனாமி அலைத் தாக்குதலுக்கு தமிழக கடலோர மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், நாகை, கன்னியாகுமரி உள்ளிட்ட 13 மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. <br /><br />இதில் கன்னியாகுமரி, கடலூர், நாகை மாவட்டங்கள் தான் மிகப் பரும் சீரழிவை சந்தித்தன. இதையடுத்து தமிழக அரசு சுனாமி தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆராய்ந்தது. அப்போது கடலோரப் பகுதிகளில் சுனாமி அலைகள் மற்றும் கடல் அரிப்பைத் தடுக்க சுவர் அமைக்கப்படும் என ¬முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். <br /><br />இதுதொடர்பான ஆய்வுப் பணிகளையும் அவர் ¬முடுக்கி விட்டார். சென்னை ஐ.ஐ.டி.யில் உள்ள கடல் சார் பொறியியல் துறைத் தலைவர் வி. சுந்தர், இதுதொடர்பாக ஆய்வறிக்கை தரும்படி தமிழக அரசால் கேட்டுக் கொள்ளப்பட்டார். சுந்தர் தனது ஆய்வுகளை ¬முடித்து அரசிடம் தனது அறிக்கையை தாக்கல் செய்துள்ளார்.<br /><br />தமிழகத்தைப் பொருத்தவரை மொத்த கடற்கரையின் நீளம் 1,076 கி.மீ ஆகும். இதில் 60 கிலோ மீட்டர் பகுதி அரபிக் கடலைச் சார்ந்துள்ளது. மீதமுள்ள கடற்கரை வங்கக் கடலையொட்டி அமைந்துள்ளது. <br /><br />இந்த 1076 கிலோமீட்டர் தொலைவில், கடலில் நதிகள் கலக்கும் கழிமுகம், சிறு ஓடைகள், சதுப்பு நிலக் காடுகள், மீன்பிடி துறைமுகங்கள், உப்பங்கழிகள், சதுப்பு நிலங்கள் போன்றவை சுமார் 435 கிலோமீட்டர் தொலைவுக்கு அமைந்துள்ளன. <br /><br />இவை கடற்கரைப் பகுதிகளை ஒட்டி வசிக்கும் மக்களுக்கு பாதுகாப்பு அரணாக உள்ளன. மீதமுள்ள 641 கிலோ மீட்டர் தூரம் மட்டுமே இயற்கை சீற்றத்திற்கு ஆளாகும் பகுதிகளாக உள்ளன. <br /><br />இதில் ஏற்கனவே 40 கிலோமீட்டர் தூரத்திற்கு தூண்டில் வளைவுகள், கற்குவியல் சுவர்கள், குறடுகள், தடுப்புச் சுவர்கள் ஆகியவை உள்ளன. மீதமுள்ள 601 கிலோமீட்டர் தொலைவு கடற்கரையையும், அதை ஒட்டி வாழும் லட்சக்கணக்கான மக்களையும் காக்க வேண்டியுள்ளது. <br /><br />சமீபத்தில் ஏற்பட்ட சுனாமி பேரழிவும், இந்த பகுதிக்குள் தான் அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. எனவே இந்த 601 கிலோமீட்டர் தொலைவு கடற்கரையில் சுனாமி பாதுகாப்புக்கு என்ன செய்யலாம் என்பது குறித்து சுந்தர் தலைமையிலான நிபுணர் குழு ஆராய்ந்து வந்தது. <br /><br />நிபுணர் குழுவின் ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைகள்: கடலோரப் பகுதிகளில் சுமார் 695.99 கோடி மதிப்பில் சில பணிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். ¬முதல் கட்டமாக ரூ. 549.37 கோடியிலும், 2வது கட்டமாக ரூ. 54.36 கோடியிலும், 3வது கட்டமாக ரூ. 92.26 கோடியிலும் பணிகளை நிறைவேற்றலாம். <br /><br />குறடுகள் (அதாவது கடலுக்குள் சிறிது தொலைவு வரை சென்று கடற்கரை வரை அமைக்கப்படும் கல் சுவர்), கருங்கல் சுவர்கள், தூண்டில் வளைவுகள், தடுப்புச் சுவர்கள் உள்ளிட்டவற்றை எங்கெங்கு அமைக்கலாம் என்பது குறித்து சுந்தர் விரிவாக விவரித்துள்ளார். <br /><br />கடலோரத் தாவரங்களை வளர்ப்பது, மணல் மேடு பாதுகாப்பு, கழிமுகத் துவாரங்களை தூர் வாருவது, கடற் மணற்பரப்பை தூய்மைப்படுத்தி அதன் கட்டமைப்பை வலுப்படுத்துவது என்று பல்வேறு ஆலோசனைகள் இந்த பரிந்துரையில் அடங்கியுள்ளன. <br /><br />நிபுணர் குழுவின் அறிக்கையைப் பெற்றுள்ள தமிழக அரசு இந்தத் திட்டத்திற்கான நிதியுதவி பெறுவது தொடர்பாக ஆசிய வளர்ச்சி வங்கி, உலக வங்கி ஆகியவற்றின் அதிகாரிகளோடு ஆலோசனைகளைத் தொடங்கியுள்ளது.<br /><br />Tnanks to :http://thatstamil.indiainfo.com/news/2005/08/01/sea.htmlKARTHIKRAMASnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10081143.post-1121162935982935932005-07-12T03:06:00.000-07:002005-07-12T03:08:55.990-07:00புனிதப் பணியில் இணைத்துக் கொள்ளுங்கள்!சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வாழும் குழந்தைகளின் மறுவாழ்வுக்காக ஐக்கிய நாடுகள் சபை பெரும் முயற்சி எடுப்பது பற்றியும், அந்தப் புனிதப் பணி 'பாலம்' அமைப்பின் கலியாணசுந்தரம் மூலமாக மேற்கொள்ளப்பட்டு இருப்பது பற்றியும் கடந்த 3.7.05-ம் தேதியிட்ட ஜூ.வி. இதழின் 'நம்பிக்கை மனிதர்கள்!' பகுதியில் எழுதியிருந்தார்கள்.<br /><br />உலகம் முழுவதும் சுனாமியால் பாதிக்கப்பட்ட மாணவ, மாணவிகள், கல்வி நிறுவனங்கள் என்ன விதத்தில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள், இவர்களுக்கு இதுவரை கிடைத்த உதவிகள் என்ன, தேவைப்படும் உதவிகள் என்ன... என்ற தகவல்களை 'பாலம்' கலியாணசுந்தரம் திரட்டி வருகிறார்.<br /><br />இதில் பொதுமக்களின் ஒத்துழைப்பையும் அவர் நாடுகிறார். சுனாமியால் பாதிக்கப்பட்ட பள்ளிக் குழந்தைகள் மற்றும் பள்ளிகள் பற்றி தங்களுக்குத் தெரிந்த தகவலை அவருக்கு யாரும் அனுப்பி உதவலாம்.<br /><br />முகவரி: எண்: 1, 4-வது பிரதான சாலை, கஸ்தூரிபா நகர், அடையாறு, சென்னை-20.<br />தொலைபேசி: (044)24402524. செல் பேசி: 09840218847.<br />மின் அஞ்சல்: anbupaalam@gmail.com<br /><br />'பாலம்' கலியாணசுந்தரம் பற்றி....<br /><br />தனக்கென எதையும் வைத்துக் கொள்ளாமல், கையில் இருக்கும் கடைசி பைசாவைக்கூட சமுதாய முன்னேற்றத்துக்காகச் செலவழிக்கும் குணம்... ‘என் னுடைய வளர்ப்புத் தந்தையாக உங்களை ஏற்றுக்கொள் கிறேன். என்னுடனேயே தங்கி ஓய்வெடுத்து, உடம்பைப் பார்த்துக் கொள்ளுங்கள்’ என்று சூப்பர் ஸ்டார் ரஜினி அழைத்தபோது, ‘இப்போது எனது குறிக்கோள் ஓய்வு இல்லை, உழைப்பு’ என்று சொல்லி, அதை மென்மையாக மறுத்த பண்பு... உதவி கிடைக்காமல் தவிக்கும் மனிதனே இருக்கக்கூடாது என்ற நிலையை உருவாக்க வேண்டும் என்ற லட்சியம்... இதெல்லாம் சேர்ந்த மொத்த உருவம்தான் கலியாணசுந்தரம்.<br /><br />திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த நிலச்சுவான்தார் ஒருவருக்கு மகனாகப் பிறந்து, இளம்வயதிலேயே சேவை உள்ளத்தோடு வளர ஆரம்பித்தவர், 1953-ம் ஆண்டு தன்னுடைய 14-வது வயதில் ‘பாலம்’ என்ற அமைப் பைத் துவங்கியிருக்கிறார். அது ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக நிலைத்து, இன்று ‘அன்புப் பாலமாக’ தழைத்து, சென்னை அடையாறில் இன்னொரு ஆலமரமாக உயர்ந்து நிற்கிறது!<br /><br />சமீபகாலமாகத் தீவிரமான நோய் தாக்குதலுக்கு ஆளாகி மீண்டிருக்கும் கலியாணசுந்தரம், எப்போதும் போல் சுறுசுறுப்பாக சமூகசேவையில் தீவிரம் காட்டிக் கொண்டு இருக்கிறார். தற்போது அவர் கையில் எடுத்திருப்பது, 'சுனாமி நிவாரணங்கள் எந்த அளவுக்கு குழந்தைகளுக்கு கிடைத்திருக்கின்றன' என்ற ஆய்வு!<br /><br />இதுபற்றிக் கேட்டபோது, தனக்கே உரிய மெலிதான குரலில் பேச ஆரம்பித்தார் கலியாணசுந்தரம்.<br /><br />‘‘டிசம்பர் 26-ம் தேதி... பல நாடுளைச் சேர்ந்தவர்களுக்குப் பேரதிர்ச்சியை அளிக்கும் பொழுதாக விடிந்தது. பலரின் வாழ்க்கை திசைமாறியது. இந்த அவலக்குரல் கேட்டு உலகமே ஓடிவந்து உதவியது. இதுவரை அரசுகளும் மற்ற அமைப்புகளும் மேற்கொண்ட நிவாரணப் பணிகள் என்ன என்பதைப் பற்றியும் குழந்தை களுக்கு அந்தப் பணிகள் எந்த அளவுக்குப் போய் சேர்கிறது என்பது பற்றியும் அறிக்கை ஒன்றை தயார் செய்தோம்.<br />சென்ற மாதம் ஐ.நா. சபை சார்பாக பில் கிளின்ட்டன் தமிழ்நாட்டுக்கு வந்தபோது, இந்த அறிக்கையை அவரிடம் சமர்ப்பித்தோம். சுனாமியால் பாதிக்கப்பட்ட 13 மாவட்டங் களைச் சேர்ந்த 567 பள்ளிக்கூடங்கள், அதில் படித்த 2 லட்சத்து 69 ஆயிரத்து 500 மாணவர்கள், மற்றும் 30 ஆயிரம் குழந்தைகள் பற்றிய தெளிவான புள்ளிவிவரங்களையும், இவர்களின் மறுவாழ்வு மற்றும் பாதுகாப்பு போன்ற பணிகளுக்காகக் கிட்டத்தட்ட ஒரு கோடி அமெரிக்க டாலர் - அதாவது, 45 கோடி ரூபாய் தேவைப்படும் என்பது பற்றியும் குறிப்பிட்டிருந்தோம். அதைப் படித்த கிளின்ட்டன், எங்கள் முயற்சியைப் பாராட்டியதோடு, ‘இந்த அறிக்கையை ஐ.நா. சபை ஏற்றுக்கொள்ளும்’ என்றும் சொன்னார். கூடவே, ‘இதுபோன்ற அறிக்கையை சுனாமியால் பாதிக்கப்பட்ட மற்ற மாநிலங்களுக்கும் சேர்த்து பண்ணலாமே? அது, ஐ.நா.சபையின் பணிகளுக்கு உதவியாக இருக்குமே!’ என்று கேட்டுக்கொண்டார். ‘அது எவ்வளவு பெரிய பொறுப்பு’ என்று நாங்கள் படபடத்து நின்ற நேரத்தில் கிளின்ட்டனுடன் வந்திருந்த ஐ.நா. சபை பிரதிநிதி ஒருவர், ‘உலகம் முழுவதும் சுனாமியால் பாதிக்கப் பட்ட மாணவர்கள், குழந்தைகள் பற்றிய அறிக்கையை உங்களால் தயார்செய்ய முடியும். அந்தப் பணியில் இறங்குங்கள்’ என்று சொல்ல... கிளின்ட்டனும், ‘உங்களால் நிச்சயம் சிறப்பாகச் செய்ய முடியும்!’ என்று என்னை ஊக்கப்படுத்தினார். அதோடு, அதற்கான அனுமதியையும் முறையாக எனக்கு வழங்கிச் சென்றார். இப்போது அதற்கான ஆயத்தப் பணிகளில்தான் இறங்கியிருக்கிறேன்!’’ என்ற கலியாணசுந்தரத்தின் குரலில் உற்சாகம் பீறிட்டது.<br /><br />‘‘இன்னும் 3 மாதங்களுக்குள் இந்த அறிக்கையை தயார் செய்து, அக்டோபரில் மீண்டும் இந்தியா வரும் கிளின்ட்டனிடம் கொடுக்க வேண்டும். கால அவகாசம் குறைவுதான் என்றாலும் ஓய்வில்லாத உழைப்பைத் தரும் மனவலிமையையும் நல்ல மனிதர்களின் ஆசீர்வாதத்தையும் எல்லாம் வல்ல இறைவன் எனக்கு வழங்க வேண்டும்!’’ என்று நம்பிக்கை பொங்கச் சொல்கிறார்.<br /><br />உழைப்பின் அருமையை உணர முடிந்தது!<br /><br /><br /><a href="http://www.vikatan.com/jv/2005/jul/13072005/jv0703.asp">தகவல் நன்றி : ஜூனியர் விகடன்</a><br /><br /><a href="http://mayavarathaan.blogspot.com/2005/07/blog-post_112090593127598719.html">நன்றி:மாயவரத்தான்.</a>ROSAVASANTHhttp://www.blogger.com/profile/15364954312745030579noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10081143.post-1116928840231360262005-05-24T02:53:00.000-07:002005-05-24T03:00:40.236-07:00பதிவுகளில்..<strong>லதா ராமகிருஷ்ணனின் கட்டுரை.</strong><br /><br />பதிவுகளில் லதா ராமகிருஷ்ணன் அவர்களின் ட்சுனாமி பேரழிவு குறித்த கள அறிக்கை வெளியாகியுள்ளது. அறிக்கை முழுவதும் ஆங்கிலத்தில் உள்ளதால், அது தமிழ்மணத்தில் இடம் பெறாது என்பதால், கட்டுரையை இங்கே பதியாமல் சுட்டியை மட்டும் தருகிறேன். ஒரு பதிவிற்காக கட்டுரை பின்னர் இந்த தளத்தில் பதியப்படும். <br /><br /><a href="http://www.geotamil.com/pathivukal/lathaontsunami.html">பதிவுகள் கட்டுரையை வாசிக்க.</a>ROSAVASANTHhttp://www.blogger.com/profile/15364954312745030579noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10081143.post-1116402757020048812005-05-18T00:48:00.000-07:002005-05-18T00:52:37.023-07:00சுனாமிக்குப் பின் நெருக்கடிகள்.சென்ற பதிவு திண்ணையிலிருந்து வெட்டி ஒட்டப்பட்டது. அதே அறிவிப்பு பதிவுகளில் இன்னும் தெளிவாக வந்திருப்பதாக தெரிவதால் அதை தருகிறேன். <br /><br /><strong>சிந்திய கண்ணீரைத் தொடர்ந்து <br />சுனாமிக்குப் பின் நெருக்கடிகள்! <br />மே 29, 2005! </strong><br /><br /><br />சுனாமியின் விளைவால் இரண்டு இலட்சத்திற்கும் அதிகமான உயிர் இழந்த ஆச்சே, இந்தோனேசியாவிலும் இலங்கையிலும் இருந்து சொல்லப்படாத சேதிகள்- தொடருகின்ற வேதனைகளின் நீள் கதைகள்! <br /><br />உரையாற்றுவோர்: <br /><br />'ஆச்சே இந்தோனேசியாவில் சமாதானம், மனித <br />உரிமைகள் சுனாமிக்குப் பிந்திய புனரமைப்பு' <br /><br />- ஈவி நார்ட்டி சேயின்- <br />(இணைப்பாளர் கொன்றாஸ் ஆச்சே- காணாமல் போனோர் <br />வன்முறையால் பாதிப்புக்குள்ளானோர் தொடர்பான ஆணைக்குழு) <br /><br />'இலங்கையில் சுனாமிக்குப் பிந்திய நெருக்கடிகளும் நவ-தாராளவாத பொருளாதாரத் திட்டமும்' <br /><br />- சரத் பெர்ணாண்டோ- <br />இணைச் செயலாளர்- காணி விவசாய <br />சீர்திருத்தத்திற்கான தேசிய இயக்கம் - <br /><br />KAIROS, CAW Canada, IAMAW Canada, USWA Humanity Fund, <br />UFCW Canada, Locals 175 and 163 <br />ஆகிய அமைப்புகளின் ஆதரவில், Tsunami Justics Working Group of the Asian Solidarity Network (www.tsunamijustice.org) என்னும் அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெறும் பொதுகூட்டம். <br /><br />இடம்: Mid Scarborough Community Centre <br />முகவரி: 2467 Eglinton Avenue East ('கெனடி சப்வே'க்கு அருகில்) <br />காலம்: மே 29, 2005 ஞாயிறு பிற்பகல் 4.30 மணி. <br /><br />உரையாடல்கள் தமிழில் மொழிபெயர்க்கப்படும். <br />அனைவரையும் அழைக்கின்றோம்.<br /><br />இதை தொடர்ந்து உள்ள அறிவிப்பு jpgகோப்பாக உள்ளது. அதை இங்கே நான் தரவில்லை என்பதால் பதிவுகளுக்கு நேரடியாய் சென்று <a href="http://www.geotamil.com/pathivukal/nizhalvukal_aftertsunami.html">இந்த பக்கத்தை </a>பார்க்கவும்.ROSAVASANTHhttp://www.blogger.com/profile/15364954312745030579noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10081143.post-1115970494434337032005-05-13T00:41:00.000-07:002005-05-13T00:48:14.436-07:00சுனாமிக்குப் பின் நெருக்கடிகள்.<strong>அறிவிப்பு</strong><br /><br />சிந்திய கண்ணீரைத் தொடர்ந்து<br /><br />சுனாமிக்குப் பின் நெருக்கடிகள்<br /><br />உரையாற்றுவோர்:<br /><br />ஆச்சே, இந்தோனேசியாவில் சமாதானம், மனித<br /><br />உ£¤மைகள் சுனாமிக்குப் பிந்திய புனரமைப்பு<br /><br />-ஈவி நார்ட்டி சேயின்-<br /><br />இணைப்பாளர்: கொன்றாஸ் ஆச்சே - காணாமல் போனோர்<br /><br />வன்முறையால் பாதிப்புக்குள்ளானோர் தொடர்பான ஆணைக்குழு<br /><br />இலங்கையில் சுனாமிக்குப் பிந்திய<br /><br />நெருக்கடிகளும் நவ-தாராளவாத<br /><br />பொருளாதாரத் திட்டமும்<br /><br />-சரத் பெர்னான்டோ-<br /><br />இணைச் செயலாளா; - காணி விவசாய<br /><br />சீர்திருத்தத்திற்கான தேசிய இயக்கம்<br /><br />சுனாமியின் விளைவால் இரண்டு<br /><br />இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் உயிர்<br /><br />இழந்த ஆச்சே, இந்தோனேசியாவிலும்<br /><br />இலங்கையிலும் இருந்து சொல்லப்படாத<br /><br />சேதிகள் - தொடருகின்ற வேதனைகளின்<br /><br />நீள் கதைகள்<br /><br />மே மாதம் 29ம் திகதி ஞு£யிறு - பி.ப.4.30 மணி<br /><br /><br />MID-SCARBOROUGH COMMUNITY CENTRE<br /><br />2467 Eglington Avenue East<br /><br /><br />(கெனடி சப்வேக்கு அருகாமையில்)<br /><br />அனைவரையும் அழைக்கிறோம் - பேச்சுக்கள் தமிழில் மொழிபெயர்க்கப்படும்<br /><br /><a href="http://thinnai.com/le0513053.html">நன்றி: திண்ணை.</a><br /><br />(திண்ணையிலிருந்து வெட்டி, உருமாற்றி, ஒட்டப்பட்டுள்ளது. வாசித்து புரிவதில் எனக்கு பிரச்சனையிருப்பினும், புரிபவர்களுக்கு பயன்பட கூடும் என்று நினைத்து பதியப்படுகிறது.)ROSAVASANTHhttp://www.blogger.com/profile/15364954312745030579noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10081143.post-1113195873783450102005-04-10T22:00:00.000-07:002005-04-10T22:04:33.786-07:00திண்ணையிலிருந்து...<strong>பேரழிவில் உளவியல் சீரமைப்பு -அனுபவங்களின் தொகுப்பு<br /><br />ஸ்ரீமங்கை</strong><br /><br />இரு மாதங்கள் முன்பு ஆழிப்பேரலையின் தாக்கத்தில் உண்டான பேரழிவின் சீரமைப்புப்பணியில் உளவியல் ரீதியான சீரமைப்பின் முக்கியத்துவம் குறித்து எழுதியிருந்தேன். அதில் முனைவர். திருமதி.சுந்தரி அவர்கள்( மகரிஷி தயானந்த் கல்லூரி, மும்பை) தலைமையில் ஒரு தன்னார்வலர் குழு கன்னியாகுமரி மாவட்டத்தில் மேற்கொள்ளவிருந்த உளவியல் சீரமைப்புப் பணி குறித்து குறிப்பிட்டிருந்தேன். அக்குழுவின் அனுபவங்களின் தொகுப்பு முனைவர். சுந்தரி அவர்கள் மூலம் கிடைக்கப்பெற்றது. அதின் சில பகுதிகள் கீழ்க்கண்டவாறு.<br /><br /><br />இக்குழுவில் IPMS ( Institute of Psychotherapy and Management Sciences ) கல்வி நிறுவனத்தின் 30 உளவியல் துறை மாணவ/மாணவியர் ,முனைவர் திருமதி K.P.சுந்தரி ( தலைமைப் பேராசிரியை, உளவியல் துறை,மகரிஷி தயானந்த் கல்லுரி, மும்பை) அவர்கள் தலைமையில் 14 ஜனவரி 05 முதல் 22 ஜனவரி 05 வரை மண்டைக்காடு புதூர்,மரமடி, முட்டுக்காடு, குளச்சல், அழிக்கால், கொட்டில்பாடு முதலிய இடங்களில் சீரமைப்புப் பணியை மேற்கொண்டனர்.<br /><br /><br />முனைவர் சுந்தரி அவர்கள் EMDR (Eye Movement Desensitization and Reprocessing ) என்னும் உளவியல் மருத்துவ முறையை ,சீரமைப்புப் பணிக்கு கையாடத் திட்டமிட்டிருந்தார்.<br /><br /><br />16 ஜனவரி 05<br /><br />மண்டைக்காடு புதூர் :<br /><br />ஆழிப்பேரலையில் மிக மோசமாகத் தாக்கப்பட்ட கிராமம் இது. சுமார் 250 குடும்பங்கள் தற்காலிகமாக, சர்ச்சில் அடைக்கலமாக இருந்தனர். இரு வகையான மருத்துவமுறையை குழு கையாடியது. பாதிக்கப்பட்டிருந்த மக்களுக்கு, முதலில் அவர்கள் துயரை முழுதும் சொல்லியழ வைத்தபின்னர், மனதை அமைதிப்படுத்தும் வழிகள் பயிற்சிக்கப்பட்டனர். முனைவர் சுந்தரி, மிகவும் வலிதாகத் தாக்கப்பட்டவர்களுக்கு EMDR முறையில் உளவியல் மருத்துவமளித்தார். <br /><br />புதூரில் ,நான்கு வயது மகள் மஞ்சுமோளை இழந்த ஆன்ண்டனி மற்றும், தனது 4 வயது, 5வயது குழந்தைகளை இழந்த செபாஸ்டின் என்ற இருவர் மருத்துவத்திற்குப் பின் துயரை ஏற்றுக்கொள்ளும் நிலையை அடைந்தனர்.<br /><br />இதே கிராமத்தில் 50 குழந்தைகள் இம்மருத்துவ உதவி பெற்றனர். அக்குழந்தைகள் தங்கள் மனநிலையை வெளிப்படுத்தும் வண்ணம், ஆழிப்பேரலையில் தங்கள் கண்டதை வரையுமாறு ஊக்கப்படுத்தப்பட்டனர். சில குழந்தைகள் பேரலையில் அடித்துச் செல்லப்பட்டு, பின் தெய்வாதீனமாக உயிர்தப்பியவர்கள். அவர்களுக்கு அச்சத்தைச் சமாளிக்கும் விதமாக சீராக சுவாசிக்கும் பயிற்சி அளிக்கபட்டது. விளையாட்டு, பாடல்கள் , இசை போன்றவை மூலமும் அவர்கள் உற்சாகமாக ஊக்குவிக்கப்பட்டனர்.<br /><br /><br />17 ஜனவரி 05<br /><br />கொட்டில்பாடு:<br /><br />காலை 8 மணிக்கு,. அருட் தந்தை சூசை, டாக்டர்.போர்கியோ முதலானோர் குழுவினரை கொட்டில்பாடு மீனவ கிராமத்திற்கு அழைத்துச் சென்றனர். இங்கு 275 பேர் ஒட்டுமொத்தமாகப் புதைக்கபட்டனர்.<br /><br />முதலில் பார்வையிட்டபின், அங்கிருந்த ஆரம்பப் பள்ளியில் பணி தொடங்கியது. 300 குழந்தைகள் ( 1 ம் வகுப்பு முதல் 4ம் வகுப்பு வரையிலான )களுக்கு வரைதல் மூலம் பயிற்சி, சுவாசச் சீரமைப்புப் பயிற்சி முதலியன அளிக்கப்பட்டது.<br /><br />பவித்திரா என்ற 10 வயது பெண், EMDR சிகிக்சைக்குப் பின் தௌ¤வாகி, தான் பிற்காலத்தில் ஒரு பொறியியல் வல்லுநராக விரும்புவதாகக் கூறினாள். <br /><br />பிசானி என்ற 6ம் வகுப்பு படிக்கும் சிறுமி, தன் கண்முன்னே தந்தையும் இரு அத்தைகளும் அலைகளில் அடித்துச் செல்லப்ட்டதைக் கண்டு உறைந்திருந்தவள், சிகிச்சைக்குப் பின் கதறியழுது தான் பிற்காலத்தில் துறவுபூண்டு பொதுநலச் சேவைசெய்யப் போவதாகச் சொன்னாள்.<br /><br /><br />18 ஜனவரி 2005<br /><br />குளச்சல் :<br /><br />750 பேர் அடையாளம்தெரியாது ஒட்டுமொத்தமாகப் புதைக்கபட்ட கொடூரம் நடந்த இடம்.<br /><br />நாகர்கோவிலில் கார்மேல் பள்ளியில் சிகிக்சை தொடங்கியது.<br /><br />அன்டோனிராஜ் என்னும் சிறுவன் இறந்துவிட்டதாகக் கருதப்பட்டு பிணவறையில் மற்ற பிணங்களோடு 5 மணிநேரம் கிடத்தப்பட்டிருந்தான். பிணங்களில் அடையாளம் காண வந்த எவரோ, அவனது உடலில் மெலிதாக நாடித்துடிப்பு இருப்பதை உணர்ந்து, மருத்துவமனைக்குத் தெரிவிக்க, 5 நாள் கழித்து அவன் நினைவுதிரும்பினான். தனது 15 வயது சகோதரன் அலையில் மரித்ததை நினைவுகொண்ட அன்டோனிராஜ் மிக மனஉளைச்சலில் இருந்திருந்தான். EMDR சிகிக்சைக்குப் பின் அவன் ஆழிப்பேரலை நிகழ்சியை விவரித்ததில், குழுவில் இருந்த மாணவர்கள் மட்டுமன்றி மருத்துவர்களும் கண்ணீர் மல்கியதை முனைவர்.சுந்தரி நினைவு கூறுகிறார்.<br /><br /><br />மற்றொரு மீட்புதவிக்குழுவில் பெண்கள் மிகுந்திருந்தனர். அவர்களில் பலருக்கும் அனைத்துக் குழந்தைகளும் மரித்துவிட்டிருந்தனர். அப்பெண்கள் குடும்பக்கட்டுப்பாடு செய்துகொண்டிருந்ததால், மீண்டும் குழந்தைகள் வரும் வாய்ப்பில்லை என்னும் பேருளைச்சலில் ஆழ்ந்திருந்தனர். பெரும்பாலான பெண்கள் இளம்வயதினர். அவர்கள் தங்கள் வாழ்க்கையில் அர்த்தமே இல்லை என்னும் முடிவிற்கு வந்துவிட்டிருந்தார்கள்.<br /><br />நிர்மலா என்ற பெண், தன் வீட்டிற்குத் திரும்ப மறுத்தாள். தனது குழந்தைகளின் சிரிப்பும், விளையாட்டும்,குரல்களும் அவ்வீட்டில் எதிரொலிக்கும் என்னும் நினைவே அவளைப் பெருமளவில் தாக்கியிருந்தது.<br /><br />ஸ்டெல்லா என்ற பெண் தனது பெண்குழந்தைகளை இழந்திருந்தாள். சீரமைப்புக் குழுவில் இருந்த இரு பெண்களை இறுகப் பிடித்துக்கொண்டவள் அவர்களில் தன் பெண்களையே கண்டதாகக் கூறிக் கதறினாள்.<br /><br />ஒரு மனோவேகத்தில், அப்பெண்களைத் தழுவிக்கொண்டு முத்தமழை பொழிந்துகொண்டிருந்த ஸ்டெல்லாவிடமிருந்து, அவர்களை விடுவிக்க முனைவர்.சுந்தரி இடைபட வேண்டியிருந்தது. பின் ரீக்கி சிகிக்சைக்குப் பின் ஸ்டெல்லா அமைதிப்படத் தொடங்கினாள்.<br /><br />முனைவர் சுந்தரி அவர்களின் வார்த்தைகளின் படி<br /><br />"In a fit of hysteria, Stella was showering them with caresses and kisses. I had to intervene and give Reiki to calm her down"<br /><br />சில பெண்களுக்கு , உணவு ஊட்டிவிடவேண்டியிருந்தது. அவர்கள் சோகத்தில் பலநாட்கள் உணவு உட்கொள்ளவேயில்லை என்பது வேதனைமிகுந்த வலிமிகுந்த செய்தி.<br /><br /><br />இன்னும் வரும்.<br /><br /><br /><br />அன்புடன்<br /><br />ஸ்ரீமங்கை<br /><br />kasturisudhakar@yahoo.com<br /><br /><br /><a href="http://thinnai.com/pl0408056.html">நன்றி : திண்ணை</a>ROSAVASANTHhttp://www.blogger.com/profile/15364954312745030579noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10081143.post-1110772444855377222005-03-13T19:46:00.000-08:002005-03-13T19:55:33.976-08:00பதிவுகளிலிருந்து..!<strong>தமிழ்நாட்டில் சுநாமி பெண்கள் குழந்தைகளுக்கு <br />விழிப்புணர்வு மற்றும் ஆற்றுப்படுத்தும் நிகழ்ச்சிகள்! </strong><br /><br /><em><strong>- வைகைச் செல்வி- </strong></em> <br /><br /><br /><br />திரையிலும் படங்களிலும் தண்ணீரில் மிதந்த படகுகளை நேரில் பார்க்கையில் தான் அதனுடைய வடிவமும் கனத்த எடையும் நமக்குப் புலனாகின்றன. ஆனால் தண்ணீரில் மிதக்க வேண்டிய இப்படகுகள் கொத்துக் கொத்தாய் நாகை மாவட்ட மணலில்... தெருக்களில் கிடப்பதைக் காண்கையில் பயங் கலந்த ஆச்சரியம் ஏற்பட்டு அதன் பின்னணியில் உள்ள சரித்திரச் சோகத்தை நினைவு கொள்ளச் செய்கின்றன. அக்கரைப் பேட்டை என்ற கிராமமே சுநாமியில் காணாமற் போய்விட்டிருந்ததாம். தண்ணீர் வடிந்த பிறகே இப்பகுதி மற்றும் கீச்சாங் குப்பம் ஆகிய இடங்களில் மக்கள் நடமாட்டம் தெரிந்தது. <br /><br />சுநாமியின் கோர தாண்டவம் முடிந்து இரு மாதங்கள் ஆகியும் நாகையிலும், வேளாங்கண்ணியிலும் மீனவ மக்கள் இன்னும் கடலுக்குள் முழு அளவில் இறங்கவில்லை. சிதிலம் அடைந்த படகுகள், அவற்றிற்குப் பின்னால் சிதறிய குடும்பங்கள், தன்னைத்தான் காப்பாற்ற வலுவின்றி இறந்த பெண்கள் கூட்டத்தைப் போலவே, இன்று நிர்க்கதியாய் நிற்கும் பெண்கள்.. சிறுமிகள்.. நிவாரணப் பணி செய்பவாகளைச் சுற்றிப் பெண்களின் கும்பல். நாங்கள் அங்கு சென்ற போது மாவட்ட ஆட்சியா திரு ஜெ.ராதா கிருஷ்ணன் <br />பம்பரமாய்ச் சுற்றி நிவாரணப் பணிகளை முடுக்கி விட்டுக் கொண்டிருந்தார். <br /><br />'ஓய்னு ஒரு சத்தம், என்ன நடந்ததுன்னு பா¡க்கிறதற்குள்ளே தண்ணீ¡ வந்துடுச்சு. ரோடெல்லாத் தண்ணீ. எது சாக்கடை எது ரோடுன்னு தொயல. விழுந்து எந்தி¡ச்சி பா¡க்கிறதற்குள்ளே எல்லாமே போயிடுச்சும்மா..' என்று ஒரு பெண் அழுதார். பிடித்த மீனைக் கூடையில் எடுப்பதற்காகப் போயிருந்த பல பெண்கள் மாண்டது இப்படித்தான். அலை பெரிதாகி நீர் வருகையில் அப்பெண்கள் 'ஏதோ பெளர்ணமிப் பெருக்கு' என்று நினைத்திருக்கின்றனர். எனவே தாங்கள் தப்பிக்க வேண்டும் என்ற எண்ணமே இல்லாமல் கூடை அடித்துக் கொண்டு போய் விடாமல் இருப்பதற்காக அதனை இறுகப் பற்றிப் பிடிப்பதிலே கவனம் செலுத்தியிருக்கின்றனர். தரங்கம்பாடி சிற்று¡ராட்சித் தலைவி திருமதி சரஸ்வதி வெற்றிவேல் வீட்டுக்கு வழக்கமாக மீன் கொண்டுவரும் பெண்களில் இரண்டு மூன்று பெண்கள் சுநாமிக்குப் பலியாகியுள்ளனர். 'மக்கள் தற்சமயம் ஓரளவு சுநாமி பயங்கரத்தில் இருந்து மீண்டு கொண்டிருப்பதாகக் கூறினா¡. அரசு உதவி ஒரு பக்கம் இருக்க, தொண்டு நிறுவனங்களும், ஆலயத்தைச் சேர்ந்தவர்களும் அளப்பரிய பணியாற்றின.' என கருத்துத் தெரிவித்தார். <br /><br />'தண்ணீ¡ வந்தது மாதி¡யே தொயலம்மா.. ஏதோ கறுப்பு புகை மாதி¡ உசரமா வந்துச்சு.. அதிலே என்ன கலந்திருந்ததோ தொயல.. அந்த தண்ணி பட்டதிலிருந்து உடம்பெல்லாம் ஒரே அரிப்பு பாருங்க' காட்டிய இடத்தில் சொறிந்து சொறிந்து தோலைப் பார்க்கவே கஷ்டமாயிருந்தது. தரங்கம்பாட்டியில் உள்ள சீதாலட்சுமி, கணவனை இழந்தவர். 'பொண்னுக்காகத்தான் அவ பேரில அரசாங்கம் கொடுத்த ஒரு லட்சத்த பேங்லே போட்டிருந்தேன். மத்ததெல்லாம் ஆண்பிள்ளங்கதான். அவ பத்தாவது வரை படிச்சிருக்கா. அவளுக்கு கல்யாணம் பண்ணவோ எதுக்காச்சும் பணம் வேனும். ஆம்பளைப் பசங்க மீன் பிடிச்சுப் பொழச்சுக்குவாங்க' என்று கண்கலங்க கூறினா¡. அருகிலே இருந்த அவரது மகள் சுதா 'தனக்கு படிக்க விருப்பம் இருப்பதாகத் தெரிவித்தார்'. <br /><br />ஆங்காங்கே வெளி நாட்டினம் முகங்கள். லண்டனைச் சோந்து ரூத் என்ற பெண்மணியிடம் என்ன சேவை செய்ய வந்திருக்கின்றனா என் வினவிய போது அங்குள்ள பாதிக்கப்ட்டவாகளுக்கு உடல் மற்றும் மன நலத்திற்கான சிகிச்சை மற்றும் ஆற்றுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளதாகத் தொவித்தார். இந்த அமைப்பிலிருந்து கனடா, அமொக்கா, சிசிலி, லண்டன் ஆகிய நாடுகளில் இருந்து தன்னா¡வத் தொண்டாகள் சுநாமி நிவாரணப் பணிக்காக வந்திருப்பதாகத் தெரிவித்தா¡. இந்தோனேஷியா போய்விட்டு நாகை வந்திருப்பதாய்த் தொவித்தார். எதற்காக உடல் சிகிச்சை என்று கேட்ட போது 'அவர்களின் காயங்களுக்கு' என்றா¡. என்ன காயமாயிருக்கும் என்ற கேள்விக்குஞ் காவல் துறையைச் சேர்ந்த கரோலினின் பதில் சந்தேகத்தைத் தீர்த்தது. 'சுநாமியால் அழிந்து போன கடைகள் பெரும்பாலும் கல் நா¡க் கூரைகளால் ஆனவை. கடல் நீ¡ இக்கடைகளை வாரி எடுத்துக் கொண்டு போகையில் நீரில் அமிழ்ந்திருந்த மக்களின் மீது விழுந்து, உரசி, அவர்களோடு இழுத்துக் கொண்டு போனதினால் ஏற்பட்ட காயம்' என்றா¡ கரோலின். <br /><br />தமிழ்நாட்டில் சுநாமி பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைப்பு மற்றும் நிவாரணப் பணிகளைக் கவனிப்பதற்காக உயா அதிகாரிகளின் பொறுப்பில் தனித்தனியாக பகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. சிறப்பு சிற்று¡ராட்சி இயக்குநா எம்.பி.நிர்மலா,ஐ.ஏ.எஸ். அவர்களின் பகுதியான வேளாங்கன்னியை 'பூஜ்ய குப்பைப் பகுதியாக' அறிவிக்கும் முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது. இப்பணியைத் துவக்கும் முன்னாஅங்குள்ள மக்களை ஆற்றுப்படுத்தல் அவசியம் என்பதை உணர்ந்த இயக்கம், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வா¡ய விழிப்புணர்வு குழுவிடம் இப்பணியை ஒப்படைக்க, குழு தரங்கம்பாடி மற்றும் வேளாங்கண்ணிப் பகுதிகளில் கலை நிகழ்ச்சிகளின் மூலம் மக்களை ஆற்றுப் படுத்தியதோடு அவர்களுக்குப் பல செய்திகளை, அதுவும் குறிப்பாக பெண்களுக்கு எடுத்துக் கூறியது. பெண்கள் கட்டாயமாக தபால் அலுவலகம் மற்றும் வங்கிகளில் சேமிக்கும் பழக்கத்தை மேற் கொள்ள வேண்டும் என்பதையும், சுய உதவிக் குழுக்கள் மூலம் மீன் விற்பதைத் தவிர வேறு சிறு தொழிற்களையும் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தியது. இக்குழுவில் உள்ள கலைஞர்களான ப.ராதா கிருஷ்ணன், மோ.தேசபந்து, எஸ்.ராஜா, இ.ஜனதா மற்றும் சி.கஸ்து¡¡ ஆகிய அனைவருமே தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தில் பணி புரியும் அரசுப் பணியாளாகளே. மேலாளா ஜி.ஆனி ஜோஸ்பின் தலைமையில் இயங்கும் இக்குழு கலை வடிவில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மாநிலமெங்கும் நடத்தி வருகின்றது. வீதி நாடகம், மேடை நாடகம், எலகுரல் நடிப்பு, கும்மி, ஒயிலாட்டம், பாடல்கள் ஆகியவை இந்நிகழ்ச்சியில் அடங்கும். சுநாமியயால் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சோந்த குழந்தைகளை விளையாட்டுகளில் ஈடுபடுத்தி, தனிப்பட்ட முறையில் அவர்களின் நம்பிக்கையை உயாத்த இக்குழு உதவியது. கலை நிகழ்ச்சிகள் முடிந்தவுடன் ஓடி வந்து குழுவினான் கைகளைப் பிடித்துக் கொண்டனர் பல பெண்கள். ஒருவா 'நாங்க இத்தனை நாளுக்குப் பொறவு இன்று தான் வாய் விட்டுச் சிரிச்சோம் என்று கூறினார். அவ்வை மகளிர் தொண்டு நிறுவனத்தைச் சோந்து ஷீலா 'பெண்கள் எந்த வேலையையும் செய்யவும் கற்றுக் கொள்ளவும் தயாரான மன நிலைக்கு இப்போது வந்து விட்டனர்' என்று தெரிவித்தா¡. இப்பெண்களின் மன நிலையில் மாற்றம் ஏற்பட்டிருப்பது அவரது பேச்சில் தெரிந்தது. இதுவே இவர்களுக்கு சுநாமி கற்றுத் தந்த பாடமாகவும் இருக்கலாம். <br /><br />எந்த ஒரு பேரழிவிலும் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் மிகச் சிக்கலானதும், எளிதில் தீ¡வு காணப்பட இயலாததாகவும் உள்ளன. சுநாமியால் பாதிக்கப்பட்ட பெண்களில் நடுத்தர வயதில் கணவனை இழந்த பெண்கள், திருமணம் நிச்சயமான நிலையில் அனைத்து பொருட்களையும் இழந்ததால் குடும்பங்களில் திருமணம் ஒத்திப் போடப்பட்டு ஆயிரம் கனவுகளைச் சுமந்து கொண்டிருந்தாலும் இளம் பெண்கள், பெற்றோரை இழந்த சிறுமிகள் உள்ளனா. நடுத்தர வயதில், தன்னந்தனியே நிராதரவாய் நிற்கும் பெண்கள் மற்றும் சிறுமிகள் அவர்களின் பாலியல் பிரச்சனைகள் ஆகியவற்றினைப் பற்றி பெண்களை இன்னும் ஆற்றுப்படுத்த வேண்டியுள்ளது. அதைப் போல சுநாமியால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு அதிக ஆறுதலும், பிற்காலம் பற்றிய நம்பிக்கை ஏற்படுத்த வேண்டியுள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகள் மேற்கொள்ள வேண்டியுள்ள கட்டாயப் பிரச்சனைகளை எதி¡கொள்ள அவர்களுக்குத் தைரியமும், ஊக்கமும், பயிற்சியும் கூடிய விரையவிலேயே அளிக்க வேண்டும். இதில் முக்கியமாகத் தொண்டு நிறுவனங்கள் ஆற்ற வேண்டிய பணி அதிகம் உள்ளது. <br /><br />வேளாங்கன்னி ஆலயத்தில் தமிழில் பிரார்த்தனை நடைபெற்றவுடன் மலையாளத்தில் நடைபெறுவது வழக்கம். எனவே சுநாமியன்று தமிழாகள் பிரார்த்தனை முடிந்து கடற்கரைக்குப் போய்விட அவர்கள் அனைவரும் பலியாகிவிட்டனராம். உதவிக்கரங்கள் விடிவெள்ளி மகளி¡ அமைப்பின் மகளிர் குழுத் தலைவி ஜுலியட் 'ஜனவா மாசம் எட்டாம் தேதி வரை நிவாரணப் பணிதான் செய்தோம். உயிர் பிழைச்சவங்கல்லாம் அந்த மாதா மேலேதான் நம்பிக்கை வைச்சிருக்கோம். கோவிலில் இருந்து மக்களுக்கு நம்பிக்கை ஊட்டும் விதத்தில் ஆறுதல் சொல்றோம். இயற்கையோடு ஒத்து வாழ்தல், இயற்கையை ரசித்தல் என்று முக்கியப்படுத்தி பயிற்சி அளிக்கிறோம். ஏனென்றால் மக்களுக்கு மீ¢ண்டும் கடலுக்குப் போக மனசில்லை. பயப்படுகிறார்கள். அவர்களின் அச்சத்தை முதலில் போக்கனும்' என்று தொவித்தார். <br /><br />கடலைப் பார்க்க மனம் து¡ண்ட அந்தி சாயும் வேளையில் கடற்சரைக்குச் சென்றபோது, அலைகளைப் பா¡க்கவே மனத்தில் ஒரு பயம்.. .. .. அலைகளின் சத்தம் கெக்களிப்பாகக் காதில் விழுந்து கொண்டிருக்கையில் விசில் சத்தம் கேட்டது. யாரோ குழந்தைகள் தான் விளையாடுகிறார்களோ என்று பேசாமலிருந்தேன். மறுபடியும் விசில்... ஒரு வயதானவர் கரையில் நின்று கொண்டிருந்த பத்துப் பதினைந்து போகளை நோக்கி வந்து கொண்டிருந்தா¡. அவர் கையில் விசில்.. 'அங்கே நிற்காதீர்கள். கொலைக்கார கடலம்மா. எப்படிக் கொலை பண்ணிட்டுப் பேசாமல் இருக்குது இந்தக் கடல். ஐந்து நிமிஷத்தில் எல்லோரையும் வா¡ட்டுப் போயிடுச்சு... எப்ப என்ன பண்னுமோ தொயாது... அங்கே நிற்காதீங்க...' என்று புலம்பியபடி எச்சரித்தார். இனியும் இந்தக் கடலில் பாய் வி¡த்து 'ஏலேலோ ஐலசா' என்று யாராலும் பாட இயலுமோ? வேளாங்கண்ணி அன்னையின் சன்னதியில் மண்டியிடுகையில் சத்தமில்லாமல் மனம் ஊமையாக அழுதது. கடற்புயலில் சிக்கிய போர்ச்சுக்கீசிய கப்பலைக் கரை சேர்ந்த அதே வேளாங்கண்ணி அன்னைதான் சுநாமி பயங்கரத்திற்குச் சாட்சியாய் மட்டுமல்ல, இப்பெண்களின் நம்பிக்கைக்கும் உறு துணையாய் அதே கடற்கரையில் நின்று கொண்டிருக்கிறாள். <br /><br />சிறப்பு சிற்று¡ராட்சி இயக்ககம் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் <br />இணைந்து நடத்தும் சுனாமி கருத்துப்பட்டறை <br />(தரங்கம்பாடி மற்றும் வேளாங்கண்ணி) 9.2.200வ மற்றும் 10.2.2005 <br /><br />சுநாமிக்குப் பின்னா பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களின் வாழ்க்கை கேள்விக் குறியாகி விடாமல் இருப்பதற்காக அரசு பல விதங்களில் நடவடிக்கை எடுத்து வருகின்றது. தமிழக அரசின் உயர் அதிகாரிகளின் தலைமையில், சுநாமி பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைப்பு மற்றும் நிவாரணப் பணிகளைக் கவனிப்பதற்காக தனித்தனியாக பகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் சிறப்பு சிற்று¡ராட்சி இயக்குநா திருமதி எம்.பி.நிர்மலா, ஐ.ஏ.எஸ். அவர்களுக்கு வேளாங்கன்னி பகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. வேளாங்கன்னினை 'பூஜ்ய குப்பைப் பகுதியாக' அறிவிக்கும் முய்றிசியில் இவர் ஈடுபட்டுள்ளார். இப்பணியைத் துவக்கும் முன்னா அங்குள்ள மக்களை ஆற்றுப்படுத்தல் அவசியம் என்பதை உணர்ந்த இயக்ககம், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய விழிப்புணர்வு கலைக்குழுவிடம் இப்பணியை ஒப்படைக்க, இக்குழு தரங்கம்பாடி மற்றும் வேளாங்கண்ணிப் பகுதிகளில் இம்மாதம் 9 மற்றும் 10 தேதிகளில் நடைபெற்ற சுனாமி கருத்துப் பட்டறையில் கலை நிகழ்ச்சிகளின் மூலம் மக்களை ஆற்றுப் படுத்தியதோடு, அவாகளுக்குப் பல செய்திகளை, எடுத்துக் கூறியது. கட்டாய சேமிப்பு, பொருட்கள் மற்றும் உடைமைகளை இன்சூரன்ஸ் செய்தல், மாற்று தொழில்களில் பயிற்சி பெறுதல் போன்றவை வலியுறுத்தப்பட்டன. இச்செய்திகள் எல்லாம் பாடலாக, நாடகமான, பலகுரல் நடிப்பாக அரங்கேற்றம் செய்யப்பட்டன. பாதிக்கப்பட்ட குடும்பங்களின் குழந்தைகளை ஊக்குவிக்கும் வண்ணம், அவர்களுக்கு விளையாட்டு நிகழ்ச்சிகள் நடத்திப் பின்னா கல்வியின் அவசியமும், வாழ்க்கையில் முன்னேறுவதின் முக்கியத்துவமும் எடுத்துக் கூறப்பட்டன. நிகழ்ச்சிகளை நடத்திய தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வா¡யப் பணியாளாகளிடம் நிகழ்ச்சி முடிந்த பிறகும் மீனவ மக்கள் பல ஆலோசனைகளைத் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருந்தமையே 'இந்நிகழ்ச்சியின் பயனை' வெளிச்சம் போட்டுக் காட்டியது. சென்னையிலிருந்து தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வா¡ய மேலாளா ஜி.ஆனி ஜோஸ்பின் தலைமையில் சென்ற கலைக்குழுவில் எஸ்.ராஜா, ப.ராதாகிருஷஷ்ணன், எம்.தேசபந்து, சி.கஸ்து¡¡, இ.ஜனதா ஆகிய பணியாளாகள் இடம் பெற்றிருந்தனம். <br /><br />நிகழ்ச்சிகள் முடிந்து பின், பெண்களில் ஒருவா 'நாங்க இத்தனை நாளுக்குப் பொறவு இன்று தான் வாய்விட்டுச் சிரிளச்சோம் என்று கூறினார். மகளி¡ தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த ஷீலா 'பெண்கள் எந்த வேலையையும் செய்யவும் கற்றுக் கொள்ளவும் தயாராக உள்ளோம்' என்று தெரிவித்தா¡. இதைக் கேட்டவுடன் சென்னையிலிருந்து வந்து நிகழ்ச்சிகள் நடத்தியதற்கான பலன் கை மேல் கிடைத்தது போலிருந்தது. நிகழ்ச்சிகளில் தஞ்சாவூர் மண்டல சிறப்பு சிற்று¡ராட்சிகளின் உதவி இயக்குநா கோ.பாண்டுரங்கன், தரங்கம்பாடி சிறப்பு சிற்று¡ராட்சி தலைவா பெ.சரஸ்வதி வெற்றிவேல், தரங்கம்பாடி சிறப்பு சிற்று¡ராட்சி செயல் அலுவலா எம்.மாரிமுத்து, மற்றும் நாகப்பட்டினம் திட்ட அலுவலா க.ஜெயக்குமா¡, மற்றும் பல அரசு அலுவலாகள் கலந்து கொண்டனா. மாவட்ட ஆட்சித் தலைவா ஜெ.இராதாகிருஷ்ணன்,ஐ.ஏ.எஸ். நிவாரணப் பணிகளை முடுக்கி விட்ட வண்ணம் அங்குமிங்கும் பம்பரமாய் சுழன்று கொண்டிருந்தார்.<br /><br /><a href="http://www.geotamil.com/pathivukal/TSUNAMI_Vaikaichelvi_march2005.html">நன்றி : பதிவுகள்.</a>ROSAVASANTHhttp://www.blogger.com/profile/15364954312745030579noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10081143.post-1109514716819765082005-02-27T06:30:00.000-08:002005-02-27T06:31:56.823-08:00மனிதனின்<strong>பயங்கள் சுனாமியை விட வலியவை !! </strong><br /><br /><strong>ந. உதயகுமார்</strong><br /><br />கடலோரச் சுற்றுலா விடுதிகளில் சுனாமி புகுந்து பேரழிவை ஏற்படுத்திய கோரக் காட்சிகளைத் தொலைக்காட்சியில் கண்டோம். சுனாமி வ்ந்து சென்று 60 நாட்கள் கடந்து விட்டன.<br /><br />சுனாமியால் தாக்கப்பட்ட மக்களில் மூன்றில் இரண்டு பங்கு மக்கள், இந்தோனேசியாவைச் சார்ந்தவர்கள். தொலைக்காட்சியில், "உலகின் வெப்பமண்டலத்தின் சுற்றுலாத் தளங்களின் சொர்க்கம்" என்று வர்ணிக்கப் படும், ·புகெட் தீவின் சில பகுதிகளுக்கு ஏற்பட்ட அழிவினை திரும்பத் திரும்ப காட்டினர். இதனால் உலக மக்களுக்கு ·புகெட் அழிந்து விட்டது என்ற எண்ணம் வளர்ந்து விட்டது போல் தோன்றுகிறது.<br /><br />உண்மையில், கிடைக்கும் தகவல்களை வைத்துப் பார்த்தால். ·புகெட் தீவிற்கு ஏற்பட்ட அழிவுகளைக் கட்டுக்குள் கொண்டு வந்து விட்டனர். அனேக கடலோர விடுதிகள் திறக்கப் பட்டு சுற்றுலாப் பயணிகள் வரவிற்காகக் காத்திருக்கின்றன.<br /><br />ஆனால் சுற்றுலாப் பயணிகளைத்தான் காணவில்லை. <br /><br />சுற்றுலாப் பயணிகள் இல்லாததால், ·புகெட் கடற்கரைகளின் ஆளில்லாத அழகிய பரந்த மணல் பரப்பை மீண்டும் காணமுடிகிறது. கடல் நீரும் மாசு குறைந்து தெளிவாகக் காணப் படுகிறது. இவை நமக்குக் கிடைக்கும் பத்திரிக்கைச் செய்திகள்.<br /><br />·புகெட் ஆபத்து மிகுந்த பகுதி என்ற எண்ணம் சுற்றுலாப் பயணிகளிடம் நிலவுவதும், அனேக மக்கள் இறந்து போன ஒரு இடத்திற்கு சுற்றுலா செல்வது மனித நேயச் செயலாக இருக்காது என்ற தயக்கமும் சுற்றுலாப் பயணிகள் ·புகெட்டை புறக்கணிக்க முக்கிய காரணங்கள் என்று கருதப் படுகின்றன.<br /><br />இப்பகுதி வாழ் மக்களில் 70 சதவிகிததிற்கும் அதிகம் பேர் சுற்றுலாவைச் சார்ந்த தொழில்களை மையமாகக் கொண்டே தங்கள் வாழ்க்கையை அமைத்திருந்தனர். ஒவ்வோரு வருடமும், ஜனவரி, ·பிப்ரவரி, மார்ச் மாதங்களில்தான் ·புகெட் தீவில் சுற்றுலாப் பயணிகளின் வரவு அதிகரித்திருக்கும்.<br /><br />இந்த முறை சுற்றுலாப் பயணிகள் வரவு குறைந்து போனதால் ·புகெட் தீவிற்கு ஏற்படும் அன்னியச் செலாவணி இழப்பு (கடந்த 60 நாட்களில் மட்டும்) இந்திய ரூபாய் மதிப்பில் 2200 கோடி என்று அளவிடப் பட்டிருக்கிறது. இது சுனாமி இப் பகுதியில் ஏற்படுத்திய அழிவை விட இரண்டு மடங்கு அதிகம் என்றும் கூறப் படுகிறது.<br /><br />ஆகவே சுற்றுலாப் பயணிகள் இப் பகுதியை புறக்கணிப்பதால் அங்குள்ள மக்களுக்கு ஏற்படும் தாக்கம் சுனாமியை விடக் கடினமாயிருப்பதைக் காண முடிகிறது.<br /><br />இப் பகுதியில் சுற்றுலாப் பயணிகளே இல்லாமல் இல்லை. வந்து போகும் வெகு சிலரில் ஒரு பிரிவினர், இப்பகுதியில் ஏற்பட்ட அழிவுகளைப் பார்வையிட வருகின்றனர். ம்ற்றொரு பிரிவினர், "நாங்கள் இங்கு செலவு செய்யும் பணம் இப்பகுதி மக்களுக்கு மிகவும் உதவும். ஆகவே இப்பகுதி மக்களுக்கு உதவவே நாங்கள் இங்கு சுற்றுலா வந்துள்ளோம்" என்று கூறியுள்ளனர்.<br /><br />யோசித்துப் பார்த்தால் இரண்டாம் பிரிவினர் கட்சியில் முடிந்தால் நாமும் சேர வேண்டும் என்றுதான் தோன்றுகிறது. சுனாமியால் பாதிக்கப் பட்ட மக்கள் இயல்பு நிலைக்கு விரைவில் திரும்ப அவர்கள் சார்ந்துள்ள முறையான தொழில்கள் நலிவடையாமல் காக்க வேண்டும் என்ற எண்ணம் அனைவரிடமும் ஏற்பட வேண்டும்.<br /><br />அனைவரும் தங்கள் சொந்த பயங்களை சிறிது ஒதுக்கி வைத்து இத்தொழில்களைத் தேவையான போது தயக்கமில்லாமல் நாட வேண்டும்.ROSAVASANTHhttp://www.blogger.com/profile/15364954312745030579noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10081143.post-1109514550560129062005-02-27T06:27:00.000-08:002005-02-27T06:29:10.563-08:00மீனவர்கள்<strong>கடலுக்குச் செல்ல ஆரம்பித்திருக்கிறார்கள்</strong><br /><br /><strong>ந. உதயகுமார்</strong> <br /><br />தமிழக மீனவர்கள் கட்டு மரங்களிலும், சிறு படகுகளிலும் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல ஆரம்பித்து விட்டனர்! இவர்கள் இப்போது ஐந்து முதல் ஆறு மைல் தொலைவு வரை கடலுக்குள் செல்கிறார்கள் என்று தெரிகிறது. <br /><br />தற்போது கடலுக்குச் சென்று வரும் மீனவர்கள், குறைந்த தூரத்தில், வழக்கத்தை விட குறைந்த நேரத்தில், அதிக மீன்கள் கிடைப்பதாகக் கூறுகிறார்கள். கடலில் மீன் வளத்தை சுனாமி அதிகரித்திருப்பதாக அவர்கள் நம்புகிறார்கள்!!<br /><br />இந்த நம்பிக்கை தவறு என்று எனக்குத் தோன்றுகிறது. <br /><br />சுனாமி, மீன் பிடிக்கும் திறனைப் பெருமளவு (திறமையான மீனவர்கள், கட்டுமரங்கள், படகுகள், மீன்வலைகள்) அழித்துவிட்ட நிலையில், வழக்கத்தை விடக் குறைவான மீனவர்களே கடலுக்குச் செல்ல முடிகிறது. <br />கடலுக்குச் செல்வதில் இன்னுமும் மீனவரிடம் நிலவும் பயமும் குறைவானோர் மீன் பிடிக்கச் செல்லும் மற்றோர் காரணம். <br />சிதைந்து போன படகுகள், மற்றும் பொது மக்களுக்கு மீன் உண்பதில் இருக்கும் அச்சத்தால் சந்தையில் மீனுக்குத் தேவை குறைந்திருத்தல், போன்ற காரணங்களால் பெரிய படகுகள் இன்னும் மீன் பிடிக்கச் செல்லவில்லை.<br />இப்போது மீன்கள் இனவிருத்தி செய்யும் காலமாகையால், கடலில் மீன்கள் எண்ணிக்கை அதிகரித்திருக்க இயற்கையாக வாய்ப்பிருக்கும்.<br /><br />சுனாமிக்கு முன், மீன் கிடைக்கும் அளவிற்கு அதிகமான அளவில் மீனவர்கள் கடலுக்குச் சென்று வந்ததால், பல்ர் நீண்ட உழைப்பிற்கும் நேரச் செலவிற்கும் பின்னரும் வெறும் கையுடன் கரைக்குத் திரும்பும் நிலை இருந்தது. ஆகவே மீனவர்கள் வருமானமும் நிலையற்றதாக இருந்தது.<br /><br /><br />மேலே எடுத்துக் காட்டிய காரணங்களால், இப்போது மீன் பிடிப்பதில் போட்டி மற்றும் திறன் குறைந்திருப்பதும், மீன்கள் இனவிருத்திக் காலத்தாலும், மீனவர்களுக்கு அதிக மீன்கள் வழக்கத்தை விடக் குறைந்த நேரம் மற்றும் முயற்சியில் கிடைக்கிறது என்பது என் எண்ணம்.<br /><br /><br />ஆனால், மீனவருக்கு மீன் வளத்தை சுனாமி அதிகரித்து விட்டதாக ஏற்பட்டுள்ள நம்பிக்கை இடைக்காலத்தில் அவர்கள் உற்சாகத்தை அதிகப் படுத்தி அவர்களைத் தொழிலுக்குச் செல்ல ஊக்கப் படுத்தும். ஆகவே இந்த நம்பிக்கை நன்மைக்கே.<br /><br /><br />அதே நேரத்தில் மற்றொரு எண்ணமும் தோன்றுகிறது. சுனாமி அழிவை மட்டும் விட்டுச் செல்லவில்லை. மீனவர்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தக் கூடிய ஒரு வாய்ப்பையும் அரசுக்கு விட்டுச் சென்றிருக்கிறது.<br /><br /><br />தெற்கு ஆசியாவில், சுனாமி நாசம் செய்த மீன் பிடிக்கும் மற்றும் மீன் வளர்க்கும் தொழிலில் இருந்த சொத்துக்களின் மொத்த மதிப்பு இந்திய ரூபாயில் 2200 கோடியைத் தாண்டும். 1,11,073 படகுகளும், 36,235 சீரமைக்க முடியாத படகு விசைகளும், ஒன்றரை கோடிக்கும் மேற்பட்ட வலை போன்ற மீன் பிடிக்கும் உபகரணங்களும், மீன் பிடி படகுகள் வந்து செல்லும் துறைமுகங்களுக்கு ஏற்பட்ட சேதங்களும், மீன் வளர்க்கும் பண்ணைகளுக்கு ஏற்பட்ட சேதங்களும் இதில் அடங்கும். இத் தகவல்களை ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பு, தன் கணக்கெடுப்பிற்குப் பின் நமக்கு அளித்திருக்கிறது.<br /><br /><br />இந்த அழிவுகளை அரசுகள் சீரமைக்கும் முயற்சிகளை எடுத்து வரும் நேரத்தில், மீன் பிடி மற்றும் வளர்க்கும் திறனை, தேவைக்கதிகமாகச் செல்லாமல் வரும் காலத்தில் கட்டுப்படுத்தும் வாய்ப்பும் அரசுகளுக்குக் கிடைத்திருக்கிறது. இப்படிக் கட்டுப் படுத்துவதால், மீனவர்களுக்கு நிலையான வருமானம் கிடைக்கும். கடலில் மீன் வளமும் நிலையாக இருக்கும்.<br /><br />அரசு செய்ய வேண்டியவை என்று எனக்குத் தோன்றியவை சில:<br /><br />சீரமைப்புக்குச் செலவிடும் பணத்தால் ஏற்படப் போகும் திறன்களை மதிப்பிட்டு, தேவையைத் திட்டமிட்டு, தேவைக்கேற்பச் செலவு செய்தல்<br />மீன் தொழிலில் ஈடுபட்டு அனைத்தையும் இழந்த மீனவர்களில் சிலருக்கு மற்ற பணிகளைச் செய்ய (திறனுள்ள ஆட்கள் தேவையான தொழில்கள் பல இந்தியாவில் உள்ளன. உதாரணம்: சாரங் கட்டுதல், தண்ணீர் புகாத் தளம் அமைத்தல் போன்ற கட்டடப் பணிகள்) பயிற்சி அளித்தல்<br />கடலில் மீன் வளத்தை தேவைப் பட்ட நேரத்தில் அருதியிட்டுக் கூறும் திறமையை வளர்த்துக் கொள்ளுதல்.<br />மீன்களுக்கான தேவையை மீனவர்கள் முன்கூட்டியே அறிந்து கொள்ள வகை செய்தல்ROSAVASANTHhttp://www.blogger.com/profile/15364954312745030579noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10081143.post-1109514417037002962005-02-27T06:26:00.000-08:002005-02-27T06:26:57.040-08:00சுனாமி நிவாரணம்!<strong>ந. உதயகுமார்</strong> <br /><br />மத்திய மாநில அரசுகளிடம் சேர்க்கப்பட்டிருக்கும் சுனாமி நிவாரணப் பணத்தின் பின்னணியில் கோடிக்கணக்கான இந்தியர்களின் சமூக நலச்சிந்தனையும், சுனாமியால் பாதிக்கப் பட்டவர்களுக்கான உண்மையான அனுதாபமும், பாதிக்கப் பட்டவர்களின் குடும்பங்கள் விரைவில் நன்னிலை திரும்ப அந்தப் பணம் உதவ வேண்டும் என்ற கவலையும், தன்னலம் கருதாத் தியாகமும் உள்ளன.<br /><br />இரு அரசுகளும் மக்களின் எண்ணங்களை புரிந்து செயல் படும் பக்குவம் பெற்றவை என்பதில் நமக்குச் சந்தேகமில்லை.<br /><br />மத்திய அரசும் மாநில அரசும் சுனாமி தாக்கிய உடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியளிப்பதில் பாரட்டும் விதத்தில் நடந்து கொண்டன.<br /><br />அதே போல், சீரமைப்புப் பணிகளிலும் விரைந்து செயல் பட வேண்டும் என்ற அவசரத்தில் சில குளறுபடிகள், அபிப்பிராய பேதங்கள் ஏற்படும் போது, அவற்றை மூட்டை கட்டி ஓரத்தில் வைத்து விட்டு, பாதிக்கப் பட்ட குடும்பங்களின் நிலமை மற்றும் பொருளாதாரம் விரைந்து சீரடையப் பாடுபடுவதில் மத்திய, மாநில மக்கள் பிரதநிதிகள் அனைவரும் இணைந்து செயல் புரியவேண்டும்.<br /><br />அனைத்தையும் இழந்து நிற்கும் ஏழை மீனவர்கள் அரசு தரும் கடனைப் பெரும் சுமையாகப் பார்ப்பது இயற்கையே. காப்பீட்டு வசதிகள் இல்லாமை மற்றும் மக்களின் அறியாமை போன்ற காரணங்களால் தொழிலுக்குண்டான மூலதனங்களை இழந்து தவிப்போருக்கு இத்தகைய எதிர்பாராத இழப்புகளுக்குக் காப்பீடு வழங்கும் பொறுப்பை அரசு மட்டுமே ஏற்க முடியும்/வேண்டும்.<br /><br />ஏழை மீனவர்கள் புதுப் படகுகள் வேண்டும் என்று எண்ணாமல், அரசு படகுகள் வாங்குவதற்காக அறிவித்த உதவிப் பணத்தைத் தானமாகத் தங்களுக்கு அளித்தால் தங்கள் உடைந்த படகுகளைச் சீர் செய்து கொள்ள முடியும் என்று கூறியுள்ளது அரசு கவனிக்க வேண்டிய விஷயம். அதே சமயம், பசையுள்ள மீனவர்களுக்கு இலவசமாகப் பணம் கொடுக்க வேண்டியதில்லை.<br /><br />இரு அரசுகளும் இணைந்து செயல் புரிந்து பாதிக்கப் பட்ட மக்களின் தேவையறிந்து விரைந்து சீரமைப்புப் பணிகளை செவ்வனே முடித்து மக்களின் ஏகோபித்த பாராட்டுகளைப் பெற வேண்டும்.ROSAVASANTHhttp://www.blogger.com/profile/15364954312745030579noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10081143.post-1109514274846221382005-02-27T06:22:00.000-08:002005-02-27T06:24:34.850-08:00சுனாமியால் வரும் பின் விளைவுகள்!<strong>ந. உதயகுமார்</strong><br /><br /><br />சுனாமி செய்து விட்டுப் போன உயிர்ச்சேதமும் பொருட்சேதமும் காணச்சகிக்க முடியாமலும் மிகவும் அதிர்ச்சி அளிப்பதாகவும் இருந்தது.<br /><br />கூர்ந்து பார்த்தால், சுனாமி சென்று விட்டபிறகும், நம் இந்தியப் பொருளாதாரத்திற்குச் சேதம் தொடர்கிறது.<br /><br />இந்தியாவின் விவசாயப் பொருளாதார வளர்ச்சி சில வருடங்களாகக் குறைந்து கொண்டே வருகிறது. இதற்கு அரசின் விவசாய மான்யக் கொள்கை, பொது வினியோகக் கொள்கையில் அரசு செய்த மாற்றங்கள், கடந்த சில வருடங்களாக நிலவிய வறட்சி நிலை, விவசாய சம்பந்தமான நம் ஏற்றுமதிக் கொள்கை ஆகியவை காரணங்கள்.<br /><br />விவசாயம், நம் பொருளாதாரத்தின் மிகப் பெரிய அங்கம்.<br /><br />வந்து சென்ற சுனாமி பல விளைநிலங்களை உவர்நிலங்களாக மாற்றியதைச் சீர் செய்யப் பல காலம் பிடிக்கப் போகிறது.<br /><br />மீன்பிடிக்கும் தொழில் மூலம் வரும் பொருளாதாரம் விவசாயப் பொருளாதாரத்தில் அடங்கும்.<br /><br />சுனாமி பல மீனவர்களையும், அவர்தம் குடும்பங்களையும் அழித்து விட்டது. மிஞ்சியவர் பலரின் கட்டுமரங்களையும், படகுகளையும், வலைகளையும், அழித்து விட்டது அல்லது அடித்துச் சென்று விட்டது.<br /><br />கடலை நண்பனாகவும், தாயாகவும் பார்த்த மீனவர்கள், இப்போது கடலுக்குள் செல்லவே அஞ்சும் நிலை ஏற்பட்டுள்ளது. போதாதென்று, மக்களுக்கு மீன் உண்பதில் அச்சம் மிகுந்துள்ளது.<br /><br />தினமும் கோடிக்கணக்கில் வியாபாரம் நடக்கும் மீன் தொழில் நசிந்து கிடக்கிறது.<br /><br />இது நமது விவசாயப் பொருளாதார வளர்ச்சியை மேலும் பாதிக்கப் போவது உறுதி.<br /><br />அரசு எவ்வளவு விரைவாகச் சீரமைப்புப் பணிகளைச் சிறப்புடன் செய்து முடிக்கிறதோ அவ்வளவு விரைவாக இந்தியப் பொருளாதாரத்திற்கு ஏற்பட்டிருக்கும் அதிர்ச்சியும் சீரடையும்.<br /><br />நமது பொருளாதாரம், சமீப காலங்களில் இத்தகைய சில இயற்கையின் தாக்குதல்களைத் தாங்கி இருக்கிறது. இதையும் தாங்கும்.<br /><br />இவையிருக்க, சுனாமி தாக்கிய போது பல நாடுகள் உதவிக் கரம் நீட்டிய போது, நம் அரசு, "எங்களை நாங்களே பார்த்துக் கொள்கிறோம்" என்று கூறியதோடல்லாமல், அண்டை தேசங்களுக்கு விரைந்து மனிதாபிமானத்துடன் உதவிக்கரம் நீட்டியது. இந்தியனாகப் பெருமைப் படுகிறேன்.<br /><br />*************************************************************************************<br /><br />இந்தியா பல கோடி ரூபாய் மதிப்புள்ள இறால் மீன்களை அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பான் முதலிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வந்தது. சுனாமிக்குப் பின், தென்னிந்தியாவில் கிழ்க்குக் கடலோரத்தில் இருந்த பல இறால் பண்ணைகள் அழிந்து விட்டன. இதனால் இறால் ஏற்றுமதி பெரிதும் பாதிப்படைந்துள்ளது.<br /><br />மீன் தொழிலுக்கு உதவியாக இருக்கும் பல்வேறு தொழில்களும் பாதிப்படையத் தொடங்கியுள்ளன. உடைந்த படகுகளைச் சீர் செய்வோர், அவ்வாறு சீர் செய்து கொடுக்க அனைத்தையும் இழந்து தவிக்கும் மீனவர்களிடம் பணம் வாங்க முடியவில்லை. மீன் தொழிலைச் சார்ந்திருந்த பனிக்கட்டித் தொழிற்சாலைகள் (ice factories) இயங்காமல் இருக்கின்றன. இவற்றில் வேலை செய்து வந்தவர்களின் ஜீவனம் பாதிக்கப்பட்டிருக்கிறது. இவற்றில் பல தொழிற்சாலைகள் ஒரு நாளைக்குப் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பனிக்கட்டிகளைச் செய்யும் திறன் பெற்றிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.<br /><br />மீன் ஏற்றுமதி நின்று போனதால், குளிர் பதன வசதி செய்யப் பட்ட கப்பல்களுக்கான தேவை குறைந்து விட்டது. பல கோடி ரூபாய் முதலீட்டில் இத்தகைய கப்பல்களைக் கட்டி அல்லது வாங்கி இயக்கும் நிறுவனங்கள், நஷ்டத்திலிருந்து தப்பிக்க வேறு சந்தைகளைத் தேடும் நிலை ஏற்பட்டுள்ளது.ROSAVASANTHhttp://www.blogger.com/profile/15364954312745030579noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10081143.post-1108318456200527612005-02-13T10:11:00.000-08:002005-02-13T10:17:52.476-08:00நாகை நடப்புகள்<strong>D. V. பாபு</strong><br /><br />ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நாகையின் நிலைக் குறித்து எழுத விரும்புகின்றேன். இடையில் எழுத நேரம் இல்லாமல் இல்லை. கிடைக்கும் நேரங்களில் மனநிலை அல்லது உடல்நிலை ஒத்துழைப்பதில்லை. ஒரு பத்தி எழுதுவதற்குள் அயற்சி வந்து தூங்கச் சென்றுவிடுவேன். எழுதாமைக்கு இன்னொரு காரணம், நான் எழுத நினைக்கும் நடப்புகளை எல்லாம் நண்பர் ரஜினி ராம்கி அவர்கள் எனக்கு முன்பே மிக அழகான நடையில், தெளிவாய் எழுதியிருப்பார். சுனாமித் தாக்குதல் நடந்து ஒரு மாதத்திற்கு மேல் ஆகிவிட்ட நிலையில், நிவாரணப் பணிகளுக்கான தீவிரப் பங்களிப்பில் இருந்து சற்று விலகி, என்னுடைய சொந்தப் பணிகளில் கவனம